குமாரபாளையத்தில் கால பைரவர் சிறப்பு வழிபாடு

குமாரபாளையத்தில் கால பைரவர் சிறப்பு வழிபாடு
X

தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவிலில் கால பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையத்தில் கால பைரவர் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி குமாரபாளையம் சிவன் கோவில்களில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், அங்காளம்மன் கோவில் சவுண்டம்மன் கோவில்கள், கள்ளிபாளையம் சிவன் கோவில், தேவூர் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் சுவாமிக்கும், காலபைரவருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture