குமாரபாளையத்தில் வீரமாத்தியம்மன் கும்பாபிஷேக விழா மண்டல பூஜை துவக்கம்

குமாரபாளையத்தில் வீரமாத்தியம்மன் கும்பாபிஷேக விழா மண்டல பூஜை துவக்கம்
X

குமாரபாளையம் அருகே வீரமாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி மண்டல பூஜைகள் நேற்று துவங்கியது.

குமாரபாளையத்தில் வீரமாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மண்டல பூஜை துவங்கியது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம், அல்லிநாயக்கன்பாளையம் வீரமாத்தி அம்மன், ஐயனாரப்பன், வீரகாரன், கன்னிமார், கருப்புசாமி, வைரப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

கும்பாபிஷேக மண்டல பூஜைகள் நேற்று முதல் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது.

பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன. இதே கோவிலில் முப்பூஜை திருவிழாவையொட்டி பிப். 22ல் அம்மனுக்கு மஞ்சள் முடிப்பு கட்டுதல், கொடியேற்று விழா, பிப்.25ல் காவிரியிலிருந்து தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வருதல், முப்பாடு அழைத்தல், வீரமாத்தி அம்மன், ஐயனாரப்பன், வீரகாரன், கன்னிமார், சுவாமிகளுக்கு முப்பூஜை நடைபெறவுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture