/* */

பள்ளி பாளையத்தில் கடை ஊழியரை திசை திருப்பி சேலை திருடிய மூதாட்டிகள்

பள்ளிபாளையத்தில் கடை ஊழியரை திசை திருப்பி மூதாட்டிகள் சேலைகள் திருடி சென்றது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

பள்ளி பாளையத்தில் கடை ஊழியரை திசை திருப்பி சேலை திருடிய மூதாட்டிகள்
X

பள்ளிபாளையத்தில் கடை ஊழியரை திசை திருப்பி மூதாட்டிகள் சேலைகள் திருடி சென்ற வீடியோ பதிவு

பள்ளிபாளையம் ஆர்.எஸ். பிரிவில் ஜவுளி கடை வைத்து இருப்பவர் செந்தில்குமார்(வயது 35.) நேற்று உணவு உண்ண சென்ற நிலையில் பெண் ஊழியர் ஒருவர் மட்டுமே இருந்தார். அப்போது அங்கு வந்த 3 மூதாட்டிகள் மற்றும் ஒரு முதியவர் சேலை வாங்க போவதாக கூறினார்கள். பெண் ஊழியரை திசை திருப்பி பேச்சு கொடுத்து, ஒவ்வொரு சேலையை காட்டி விலை என்ன? என கேட்டுக்கொண்டு இருந்தனர்.

அப்போது ஒரு மூதாட்டி அங்கு தேர்வு செய்து வைத்திருந்த 10க்கும் மேற்பட்ட சேலைகளை தன் கால் இடுக்கில் மறைத்துகொண்டுள்ளார். இரண்டு துண்டுகள் மட்டும் வாங்கி கொண்டு அவர்கள் சென்றனர். சேலை எண்ணிக்கை குறைந்ததை கண்ட ஊழியர், உரிமையாளரிடம் கூறி சி.சி.டி.வி. கேமராவில் பதிவானதை பார்த்த போது, அந்த கும்பல் சேலைகளை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து பள்ளிபாளையம் போலீசில் புகார் தெரிவிக்க, பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 16 Jun 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  5. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  6. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  7. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  9. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  10. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...