வட்ட அளவிலான தடகள போட்டியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சாம்பியன்

வட்ட அளவிலான தடகள போட்டியில் குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
வட்ட அளவிலான தடகள போட்டியில் குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் வட்ட அளவிலான தடகள போட்டி நடந்தது. இதில் குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 174 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். 14 வயதிற்குரிய மாணவிகள் பிரிவில் மவுனிகா என்ற மாணவி 600 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடம், 400 மீட்டரில் இரண்டாமிடம், 200 மீட்டரில் முதலிடம் வந்து, 13 புள்ளிகள் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றார். சாதனை படைத்த மாணவியரை தலைமை ஆசிரியை கலைச்செல்வி, பி.டி.ஏ. மற்றும் எஸ்.எம்.சி. நிர்வாகிகள் மாவட்ட அளவில் வெற்றி பெற பாராட்டினர்.
குமாரபாளையத்தில் ஆடவர், மகளிர் கபாடி போட்டிகள்
நாமக்கல் மாவட்ட கபாடி கழகம் சார்பில் குமாரபாளையம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் கபாடி போட்டி இரு நாட்கள் நடைபெற்றது. இதில் ஆடவர் 42 அணியினரும், மகளிர் 10 அணியினரும் பங்கேற்றனர். போட்டிகளை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலர் மதுரா செந்தில் தொடக்கி வைத்தார்.
திருச்செங்கோடு ஒன்றிய தி.மு.க. செயலர் வட்டூர் தங்கவேல், குமாரபாளையம் நகர செயலர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் மகளிர் அணியில் திருச்செங்கோடு அன்னை தமிழ் அணியினர் முதல் பரிசும், பள்ளிபாளையம் தங்கராஜ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் இரண்டாம் பரிசும், பள்ளிபாளையம் பவித்ரா நினைவு அணியினர் மூன்றாம் பரிசும், குமாரபாளையம் எம்.கே.பில்டர்ஸ் அணியினர் நான்காம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கபரிசு மற்றும் கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஆடவர் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நடுவர்களாக சண்முகசுந்தரம், செல்வராஜ், ஹரிஹரன், தங்கவேல், செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu