இலவச எலும்பு, மூட்டு பரிசோதனை முகாம்

இலவச எலும்பு, மூட்டு பரிசோதனை முகாம்
X

குமாரபாளையத்தில் பவானி குமாரபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச எலும்பு, மூட்டு மருத்துவ முகாமில் சேர்மன் விஜய்கண்ணன் பங்கேற்று பேசினார்.

குமாரபாளையத்தில் இலவச எலும்பு, மூட்டு பரிசோதனை முகாம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் பவானி குமாரபாளையம் ரோட்டரி சங்கம் மற்றும் அர்ணவ் ஆர்தோ கேர் சார்பாக இலவச எலும்பு, மூட்டு பரிசோதனை முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் பிரபாத் மகேந்திரன் தலைமை தாங்கினார். குமாரபாளையம் நகர்மன்ற தலைவர் சஷ்டி விஜய்கண்ணன் முகாமை துவக்கி வைத்து வாழ்த்தி பேசினார்.

இதில், டாக்டர் நரேஷ் தனக்கோடி பேசியதாவது: நாம் அவ்வப்போது நம் உடலின் ரத்தத்தில் உள்ள உப்பு, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், பல் பரிசோதனை என பார்க்கிறோம். ஆனால் மூட்டு எலும்புகளின் உறுதித்தன்மையை நாம் பார்ப்பதில்லை. தற்போது 60 வயதை கடந்தவர்கள் லேசாக தடுக்கி விழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. ஆனால் விவசாயிகளுக்கு பெரும்பாலும் எலும்பு முறிவு ஏற்படுவதில்லை. காரணம் அவர்கள் அதிக நேரம் வெயிலில் வேலை செய்வதால் அவர்களுக்கு வைட்டமின் டி அதிக அளவில் கிடைக்கிறது. அன்றாடம் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது நமது உடலில் வெயில் படவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

எலும்பு மூட்டு சிகிச்சை குறித்து டாக்டர்கள் கூறியதாவது:மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அல்லது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது சேதமடைந்த மூட்டுகளை மாற்றுவதற்கான அறுவை சிகிச்சை ஆகும். மூட்டுகள் என்பது முழங்கால், இடுப்பு மற்றும் தோள்பட்டை போன்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகள் ஒன்று சேரும் குறுக்குவெட்டு ஆகும் .

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது சேதமடைந்த மூட்டை அகற்றி புதியதைச் செருகுவதை உள்ளடக்கியது. சில நேரங்களில், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் முழு மூட்டையும் அகற்ற மாட்டார், ஆனால் சேதமடைந்த பகுதிகளை மாற்றுவார் அல்லது சரிசெய்வார்.பிளாஸ்டிக், உலோகம் அல்லது இரண்டின் கலவையால் செய்யப்பட்ட ஒரு புதிய கூட்டு (புரோஸ்டெசிஸ்), ஒருவேளை ஒரே இடத்தில் சிமென்ட் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது சிமென்ட் செய்யப்படவில்லை. அதில் புதிய எலும்பு வளர்கிறது.தொடர்ந்து மூட்டு வலி உள்ளவர்களுக்கும், நடப்பது, படிக்கட்டுகளில் ஏறுவது, குளிப்பது போன்ற வழக்கமான செயல்களைச் செய்வதில் சிக்கல் உள்ளவர்களுக்கு மூட்டு மாற்று சிகிச்சையே பெரும்பாலும் தீர்வாகும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

முகாமில், . எலும்பின் உறுதித்தன்மை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு இலவசமாக பார்க்கப்பட்டது. 120-ம் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்று பயன் பெற்றனர். இதில், திட்ட இயக்குனர் தண்டாயுதபாணி, செயலர் சீனிவாசன், பொருளர் ஜீவா சித்தையன் உள்பட பலர் பங்கேற்றனர்.


Tags

Next Story
ai in future agriculture