உணவு பொருள் அதிகாரி ஆய்வு: பெட்டிக்கடை சீல் வைத்து அபராதம்

உணவு பொருள் அதிகாரி ஆய்வு:  பெட்டிக்கடை  சீல் வைத்து அபராதம்
X

குமாரபாளையம் அருகே உணவு பொருள் அதிகாரி ஆய்வு செய்து பெட்டிக்கடை அடைத்ததுடன் அபராதம் விதித்தார். உடன் எஸ்.ஐ. டேவிட் உள்ளார்.

குமாரபாளையம் அருகே உணவு பொருள் அதிகாரி ஆய்வு செய்து பெட்டிக்கடைக்கு சீல் வைத்ததுடன் அபராதமும் விதித்தார்.

குமாரபாளையம் அருகே உணவு பொருள் அதிகாரி ஆய்வு செய்து பெட்டிக்கடை அடைத்ததுடன் அபராதம் விதித்தார்.

குமாரபாளையம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு அருகே உள்ள பெட்டிக்கடை, பேக்கரி, மளிகை உள்ளிட்ட சுமார் 22 கடைகளில், உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஆய்வு மேற்கொண்டார். இதில் குப்பாண்டபாளையம் பகுதியில், பள்ளி அருகே இருந்த பெட்டிக்கடையில் ஆய்வு செய்த போது, அதில், புகையிலை பொருளான குட்கா விற்பது கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, 700 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் உரிமையாளர் சுந்தர்ராஜனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், பள்ளி அருகில் கடை இருந்ததால் அந்தக்கடைக்கு சீல் வைத்து அடைக்கப்பட்டது. இதில் எஸ்.ஐ. டேவிட் உடனிருந்தார்.

இது குறித்து உணவுப்பொருள் அலுவலர் ரங்கநாதன் கூறியதாவது:அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதை வஸ்து பொருட்கள் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கடை அடைப்பு மற்றும் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பேக்கரிகளில் கலப்பட டீத்தூள், காலாவதியான குளிர்பானங்கள், ஓட்டல் கடைகளில் பழைய உணவுபொருட்கள், மளிகை கடைகளில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சமைக்கப்பட்ட உணவுகளில் செயற்கை வண்ணம் சேர்க்க கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.



Tags

Next Story
ai in future agriculture