தீயணைப்பு படையினர் விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில் தீயணைப்பு படையினர் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தொண்டு வாரம் ஏப். 14 முதல் 20 வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சார்பில் தீத்தொண்டு நாள் விழிப்புணர்வு பேரணி நகராட்சி அலுவலகம் முன்பு துவங்கி, முக்கிய சாலைகளின் வழியாக சென்று பள்ளிபாளையம் சாலையில் உள்ள தீயணைப்பு படையினர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
பேரணியை நகராட்சி ஆணையாளர் (பொ) ராஜேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தியவாறும், கோஷங்கள் போட்டவாறும், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தவாறும் பேரணியில் சென்றனர். கல்லூரி முதல்வர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிலைய அலுவலர் தண்டபாணி பேசியதாவது:தீயணைப்பு பணி ஆபத்து நிறைந்தது என்றாலும், சவாலுடன் எதிர்கொண்டு நாம் அனைவரும் பணியாற்றி வருகிறோம். தீயணைக்கும் பணியின் போது இறந்தவர்களின் பட்டியல் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் இதற்கு மேலும் நீடிக்க கூடாது என்பது என் விருப்பம். பொதுமக்களுக்கு சேவை செய்வோம். எச்சரிக்கையுடன் பணியாற்றுவோம்.
முன்னதாக, தீயணைப்பு படையினர் பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. மாநில அளவில் தீயணைப்பு பணியின் போது உயிரிழந்தவர்கள் பெயர் பட்டியலுடன், தீயணைப்பு வீரர் போல் உருவ பொம்மை அருகே வைக்கப்பட்டிருந்தது. நிலைய அலுவலர் மற்றும் மற்ற தீயணைப்பு படையினர் மலர் வளையம் வைத்து, மலரஞ்சலி செலுத்தியதுடன், இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu