ஜே.கே.கே.நடராஜா கல்லூரியில் தீயணைப்பு படையினர் செயல்முறை விளக்க முகாம்

ஜே.கே.கே.நடராஜா கல்லூரியில் தீயணைப்பு படையினர் செயல்முறை விளக்க முகாம்
X

குமாரபாளையத்தில் ஜே.கே.கே.நடராஜா கல்லூரி வளாகத்தில் தீயணைப்பு படையினர் செயல்முறை விளக்க முகாம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் ஜே.கே.கே.நடராஜா கல்லூரியில் தீயணைப்பு படையினர் செயல்முறை விளக்க முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா கல்லூரி வளாகத்தில் தீயணைப்பு படையினர் சார்பில் தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த செயல்முறை விளக்க முகாம் தாளாளர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா, நிலைய அலுவலர் தண்டபாணி தலைமையில் நடந்தது.

இதில் தீ விபத்து ஏற்பட்டால், அதிலிருந்து பாதிக்கப்பட்ட நபரை மீட்பது எப்படி, கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய நபரை மீட்பது எப்படி, கேஸ் சிலிண்டர் கையாளும் முறை, ஏரி, கிணறு ஆகிய நீர் நிலைகளில் மூழ்கிய நபரை மீட்பது, ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்வோரை மீட்பது, உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தீயணைப்பு படையினர் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள், மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்று பயன் பெற்றனர்.

தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தொண்டு வாரம் ஏப். 14 முதல் 20 வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தீயணைப்பு படையினர் பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் தண்டபாணி தலைமையில் நடைபெற்றது.

மாநில அளவில் தீயணைப்பு பணியின் போது உயிரிழந்தவர்கள் பெயர் பட்டியலுடன், தீயணைப்பு வீரர் போல் உருவ பொம்மை அருகே வைக்கப்பட்டிருந்தது. நிலைய அலுவலர் மற்றும் மற்ற தீயணைப்பு படையினர் மலர் வளையம் வைத்து, மலரஞ்சலி செலுத்தியதுடன், இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். நிலைய அலுவலர் தண்டபாணி பேசியதாவது:

தீயணைப்பு பணி ஆபத்து நிறைந்தது என்றாலும், சவாலுடன் எதிர்கொண்டு நாம் அனைவரும் பணியாற்றி வருகிறோம். தீயணைக்கும் பணியின் போது இறந்தவர்களின் பட்டியல் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் இதற்கு மேலும் நீடிக்க கூடாது என்பது என் விருப்பம். பொதுமக்களுக்கு சேவை செய்வோம். எச்சரிக்கையுடன் பணியாற்றுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதன் ஒரு கட்டமாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சார்பில் தீத்தொண்டு நாள் விழிப்புணர்வு பேரணி நகராட்சி அலுவலகம் முன்பு துவங்கி, முக்கிய சாலைகளின் வழியாக சென்று பள்ளிபாளையம் சாலையில் உள்ள தீயணைப்பு படையினர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. பேரணியை நகராட்சி ஆணையாளர் (பொ) ராஜேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தியவாறும், கோஷங்கள் போட்டவாறும், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தவாறும் பேரணியில் சென்றனர். கல்லூரி முதல்வர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture