/* */

குமாரபாளையத்தில் பயிர்கடனுக்காக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

குமாரபாளையத்தில் பயிர்கடன் வழங்க கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் பயிர்கடனுக்காக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
X

குமாரபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன் பயிர்கடன் வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த ஆண்டு பயிர்க்கடன் வழங்கியது போல் அனைத்து விவசாயிகளுக்கும் இந்த ஆண்டும் பயிர்க்கடன் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலர் பெருமாள் தலைமை தாங்கினார்.

இதுகுறித்து பெருமாள் கூறுகையில், குமாரபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த ஆண்டு 685 நபருக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டது. மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டு இரண்டு மாதங்கள் முடிந்தும் இதுவரை பயிர்க்கடன் வழங்கவில்லை. விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர்கடன் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் பயிர்க்கடன் கொடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என அவர் கூறினார்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராஜு, விவசாயிகள் சங்க தலைவர் பெருமாளிடம் நேரில் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியபின் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டது.

Updated On: 4 Oct 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்