/* */

தேர்தல் பணிகள் குறித்து டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு

குமாரபாளையத்தில் தேர்தல் பணிகள் குறித்து டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

தேர்தல் பணிகள் குறித்து டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு
X

படவிளக்கம் : குமாரபாளையத்தில் தேர்தல் பணிகள் குறித்து டி.ஐ.ஜி. உமா நேரில் ஆய்வு செய்தார்.

தேர்தல் பணிகள் குறித்து டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு

குமாரபாளையத்தில் தேர்தல் பணிகள் குறித்து டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு செய்தார்.

ஏப்.19 லோக்சபா தேர்தல் நடப்பதையொட்டி அரசியல் கட்சியினர் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. வங்கி மேலாளர்கள், நிதி நிறுவன நிர்வாகிகள், நகைக்கடை அதிபர்கள், டாஸ்மாக் கண்காணிப்பாளர்கள், டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் என பலதரப்பட்ட நபர்களுடன், போலீசார் பலகட்டங்களாக ஆலோசனை கூட்டம் நடத்தி, எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தினர். ஓட்டுச்சாவடி ஏற்பாடு பணிகள் நடந்து வரும் நிலையில், போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைககள் குறித்து, சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. உமா, நேரில் பங்கேற்று, டி.எஸ்.பி. இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசாரிடம் கேட்டறிந்து, ஆலோசனை கூறினார்.

பெட்ரோல் பங்க்குகளில் பாட்டிலில் பெட்ரோல் தர கூடாது என போலீசார் அறிவுறுத்தல்

குமாரபாளையத்தில் நடந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டத்தில், பாட்டிலில் பெட்ரோல் தர கூடாது என போலீசார் அறிவுறுத்தினர்.

தேர்தல் பிரச்சார சமயங்களில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்ககுமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. பொதுமக்கள் பெட்ரோல் பங்க்கிற்கு கேன் மற்றும் பாட்டில் கொண்டு வந்து பெட்ரோல் கேட்டால் கொடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. போலீசாரின் இந்த தகவலை ஏற்று, இனி யாருக்கும் பாட்டிலில் பெட்ரோல் கொடுக்க மாட்டோம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் உறுதி கூறினர். எஸ்.ஐ.க்கள் தங்கவடிவேல், கெங்காதரன், எஸ்.எஸ்.ஐ.க்கள் குணசேகரன், முருகேசன், மாதேஸ்வரன், ஏட்டுக்கள் ராம்குமார், பார்த்திபன் உள்பட போலீசார் பலரும் உடனிருந்தனர்.

Updated On: 18 April 2024 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  3. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  5. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  7. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  8. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி
  10. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!