/* */

உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு அருகே உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

திருச்செங்கோடு வட்டம், சிக்கநாயக்கன்பாளையம் கிராமம், பலநாய்க்கன்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

திருச்செங்கோடு அருகே உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்செங்கோடு வட்டம், சிக்கநாயக்கன்பாளையம் கிராமம், பலநாய்க்கன்பாளையத்தில் உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டை உயர்த்தி வழங்க வலியுறுத்தி விவசாயி சந்திரசேகர் தலைமையில், தலைவர் கோபால் முன்னிலையில், ஆறுமுகம் தோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிறப்பு அழைப்பாளராக சங்ககிரி ராஜேந்திரன், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள் கலந்து கொண்டனர். கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்ப பட்டன. இது குறித்து பெருமாள் கூறியதாவது:கூடுதலாக இழப்பீடு வழங்கும் வரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும். அதுவரை இப்போது போடப்பட்ட தொகையை வாங்குவதில்லை என்று அவர் கூறினார். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெருமளவில் பங்கேற்றனர்.



Updated On: 2 Feb 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...