குமாரபாளையத்தில் தீன் தயாள் உபாத்யாயா நினைவு நாள் அனுஷ்டிப்பு

குமாரபாளையத்தில் பா.ஜ.க. சார்பில் ஜன சங்கம் நிர்வாகி தீன் தயாள் உபாத்யாயா நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் பா.ஜ.க. சார்பில் ஜன சங்கம் நிர்வாகி தீன் தயாள் உபாத்யாயா நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
பா.ஜ.க.வின் தாய் சங்கம் என அழைக்கப்படும் ஜன சங்கத்தின் நிர்வாகி தீன் தயாள் உபாத்யாயா நினைவு நாள் நேற்று குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில், பள்ளிபாளையம் பிரிவு சாலையில் மாவட்ட பொது செயலர் சரவணராஜன் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட துணை தலைவர் கனகராஜ், நகர செயலர் சரவணன், மாவட்ட அரசு தொடர்பு பிரிவு நிர்வாகி செல்வராஜ், மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் பாலாஜி, நகர வர்த்தக பிரிவு தலைவர் சேகர், வக்கீல் தங்கவேல், உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu