Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் மரம் சாய்ந்து விழும் அபாயம்: அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
குமாரபாளையத்தில் மரம் சாய்ந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அதனை அகற்ற வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
குமாரபாளையத்தில் மரம் சாய்ந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அதனை அகற்ற வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதி இடைப்பாடி சாலையில் பேக்கரி முன்பாக உள்ள பழைய மரம் ஒன்று பிடிமானம் இல்லாமல் எந்நேரமும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக, அந்த மரத்தை அகற்ற வேண்டி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமாரபாளையம் நகராட்சி நிர்வாகத்தினர் இதனை கருத்தில் கொண்டு உடனே அந்த மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.