Begin typing your search above and press return to search.
'உள்ளே வராதே; கொரோனா கண்ட்ரோல்' பள்ளிபாளையம் : கடைக்குள் அனுமதி இல்லை
பள்ளிபாளையம் டீ கடைகள் மற்றும் பேக்கரிகளில் கடைக்குள் அமர்ந்து டீ சாப்பிட அனுமதி இல்லை.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பேக்கரி டீ கடைகளில் பார்சல் டீ மட்டுமே அனுமதியளித்திருப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருவதாக கூறப்படுகிறது.
கொரோனா தொற்று 2வது அலை மிக வேகமாக தமிழகம் முழுவதும் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. அதன்படி டீக்கடை, பேக்கரிகளில் பார்சல் டீ மட்டுமே வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசும், நாமக்கல் மாவட்ட நிர்வாகமும் உத்தரவிட்டிருந்தது. இதன்படியே நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதி டீக்கடை, பேக்கரிக்கு வரும் வாடிக்கையாளர்களை கடையின் உரிமையாளர்கள் கடைக்குள் செல்ல அனுமதி அளிக்கவில்லை. அதனால் கடையின் வாசலில் நின்று டீ அருந்தி செல்வதை பார்க்க முடிந்தது.