Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் 9, பள்ளிபாளையத்தில் 7 பேருக்கு கொரோனா
குமாரபாளையத்தில் 9 பேருக்கும், பள்ளிபாளையத்தில் 7 பேருக்கும் புதிதாக நேற்று தொற்று ஏற்பட்டுள்ளது.
HIGHLIGHTS
பள்ளிபாளையத்தில் 7 பேருக்கும், குமாரபாளையத்தில் 9 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு அதனால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதேபோல நாமக்கல் மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாஸ்க் அணியாமல் வருபவர்களை எச்சரிக்கை செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல்,கூட்டம் கூடுவதை தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு வழிகாட்டி வருகின்றனர்.
குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகங்களும் கொரோனா பரவலை தடுக்கும்விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நேற்றைய நிலவரப்படி குமாரபாளையத்தில் 9 பேருக்கும்,பள்ளிபாளையத்தில் 7 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.