/* */

மாஸ்க்குகளை கண்ட இடங்களில் வீசாதீர்

மாஸ்க்குகளை கண்ட இடங்களில் வீசுவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

மாஸ்க்குகளை கண்ட இடங்களில் வீசாதீர்
X

சாலையில் கிடக்கும் மாஸ்க் மற்றும் கையுறைகள்  (மாதிரி படம்)

குமாரபாளையத்தில் கண்ட இடங்களில் மாஸ்க்குகளை வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் இரண்டாம் அலை தமிழகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. மாஸ்க் அணிவது கட்டாயம். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கூட்டமாக குழுமி இருக்க கூடாது என்பன போன்ற கட்டாயம் பின்பற்றவேண்டியவைகளை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மாஸ்க்குகளை கண்ட இடங்களில் கழட்டி வீசுவது நோய் தொற்று பரவ வழிவகுக்கும். பொது மக்கள் மாஸ்க்குகளை கண்ட கண்ட இடங்களில் வீசாமல் முறையாக அவைகளை அப்புறப்படுத்த வேண்டும். ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்தப்படும் கையுறைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே சுகாதாரத்துறை அறிவித்து அவைகளை பின்பற்ற வேண்டும் என்று நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், பொது மக்கள் அவைகளை முறையாக பின்பற்றாமல் மாஸ்க்குகளை கண்ட இடங்களில் வீசுகின்றனர்.

பல நோய்கள் உள்ளவர்களும் மாஸ்க் அணிந்து இருப்பார்கள். அந்த நோய் கிருமிகள் அந்த மாஸ்க்குகளில் மறைந்து இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. அவைகள் காற்று மூலமாக அல்லது வேறு வழிகளில் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே, பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாஸ்க்குகளை கண்ட இடங்களில் வீசுவதை தவிர்க்க வேண்டும். நகராட்சி நிர்வாகமும் மாஸ்க்குகளை கண்ட இடங்களில் வீசுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 19 April 2021 11:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!