குமாரபாளையத்தில் போலீசார் கொரோனா விழிப்புணர்வு

குமாரபாளையத்தில் போலீசார் கொரோனா விழிப்புணர்வு
X

கொரோனா வைரஸ் (மாதிரி படம்)

குமாரபாளையத்தில் போலீசார் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குமாரபாளையத்தில் போலீசார் கொரோனா விழிப்புணர்வு செய்தனர்.

நாமக்கல் மாவட்ட எஸ்.பி. சக்திகணேசன் வழிகாட்டலில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் இருந்து போலீசார் பொதுமக்களுக்கும்,இருசக்கர வாகனங்களில் வந்தோர் மற்றும் மற்ற வாகனங்களில் வந்தோருக்கும் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதன்படி, குமாரபாளையம் போலீஸ் சார்பில் இருசக்கர வாகனங்களில் மாஸ்க் போடாமல் வந்தோரை மாஸ்க் போடுவதற்கு அறிவுரை கூறி அனுப்பினர். அதேபோல மாஸ்க் போடாமல் வந்த பொது மக்களுக்கும் கொரோனா பரவலை தடுக்க மாஸ்க் அணிவது கட்டாயம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் முன்பாக கொரோனா விழிப்புணர்வு பேனர் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai in future agriculture