/* */

பள்ளிபாளையத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது

HIGHLIGHTS

சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம், ஜூன் 12 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு திட்ட அமைப்புகள் சார்பில், விழிப்புணர்வு நிகழ்வு, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், மத்திய அரசு இயக்குனர் ஆண்டனி ரெனிதா சரளா ஆகியோர் துவக்கி வைத்தார். தேசிய குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு திட்டத்தின் கீழ் பயன் பெறும் பள்ளி மாணவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றும், பெற்றோர்கள் இனி எங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டோம் எனவும் உறுதிமொழி ஏற்றனர்.

பின்பு, தேசிய குழந்தை தொழிலாளர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு வேர்டு நிறுவனத்தின் சார்பாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இத்திட்டமானது முழுமையாக CACL அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யபட்டு நடைபெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல்களை கடைபிடித்து கலந்து கொண்டனர்.

Updated On: 12 Jun 2021 2:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  2. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  3. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  4. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  5. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  7. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  8. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  10. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!