/* */

வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை: அகற்றும் பணி தீவிரம்

தேவூர் அருகே, கிளை வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றி, தூர்வாரும் பணியில் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை: அகற்றும் பணி தீவிரம்
X

கால்வாயில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கணேஷ் நேரில் பார்வையிட்டார். 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து கிழக்குக்கரை கால்வாயில் திறந்துவிடப்படும் தண்ணீர், தேவூர் அருகே அரசிராமணி குள்ளம்பட்டி, கல்லம்பாளையம், அம்மாபாளையம், புள்ளாக்கவுண்டம்பட்டி, கத்தேரி வழியாக நாமக்கல் மாவட்டம் குப்பாண்டபாளையம், வெப்படை வரை செல்கிறது.

இதில் பொன்னம்பாளையம் பகுதியில் இருந்து பிரிந்து கிளை வாய்க்கால் பூமணியூர் பாலம், ஒக்கிலிப்பட்டி, தண்ணிதாசனூர், வட்ராம்பாளையம், சோழக்கவுண்டனூர், சுண்ணாம்புகரட்டூர், பாலிருச்சம்பாளையம் வழியாக கடந்து சென்று, அண்ணமார் கோவில் பகுதியில், காவிரி ஆற்றில் கலக்கிறது.

கடந்த சில நாட்களாக, கிளை வாய்க்காலில் அதிகளவில் ஆகாயத்தாமரை கொடிகள் சூழ்ந்து, வாய்காலில் ஆக்கிரமித்து உள்ளதால் தண்ணீர் விரைந்து கடைமடை பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தடைபட்டது. இதனையடுத்து, அரசிராமணி குள்ளம்பட்டி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கணேஷ் நேரில் பார்வையிட்டு, ஆகாயத்தாமரை கொடிகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி, ஆகாயத்தாமரை உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Updated On: 2 Nov 2021 11:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!