/* */

குமாரபாளையத்தில் அண்ணனை கத்திரியால் குத்திய தம்பி: போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் குடும்ப தகறாறு காரணமாக அண்ணனை தம்பி கத்திரியால் குத்தினார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அண்ணனை கத்திரியால் குத்திய தம்பி: போலீசார் விசாரணை
X

கத்திரியால் குத்தப்பட்ட காயங்களுடன் தினேஸ்குமார்.

குமாரபாளையத்தில் குடும்ப தகறாறு காரணமாக அண்ணனை தம்பி கத்திரியால் குத்தினார்.

குமாரபாளையம் காவேரி நகரில் வசிப்பவர் ராமலிங்கம், 60. இவருக்கு தினேஷ்குமார், 28, புவனேஸ்வரன், 26, இரு மகன்கள் உள்ளனர். ராமலிங்கம் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று தனியாக வசித்து வருகிறார். குடும்ப தகறாறு காரணமாக நேற்று காலை 11.30 மணியளவில் தினேஸ்குமாரை, புவனேஸ்வரன் கத்திரியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தினேஸ்குமார் கூறியதாவது:- அப்பாவிடம் 2 லட்சமும், என்னிடம் ஒரு லட்சம் ரூபாயும் தம்பி புவனேஸ்வரன் கடனாக வாங்கியிருந்தான். பலமுறை கேட்டும் தரவில்லை. அப்பா வைத்திய செலவிற்கு பணம் வேண்டும் என்பதால் தம்பியிடம் அப்பா பணம் கேட்க, அவரை அடித்துள்ளான். இது பற்றி தகவலறிந்த நான், அவனை கேட்க, என் வீட்டிற்கு வந்த அவன் வாக்குவாதம் செய்த போது, ஒரு கட்டத்தில் கத்திரியை எடுத்து, என் இடது கண்ணனுக்கு அருகில் குத்தி விட்டான். இவனுடன் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ், ரமேஸ் வந்திருந்தனர். அவர்கள்தான் தடுத்தனர். இது பற்றி குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளேன். தம்பி தி.மு.க.வில் நகர இளைஞர் அணி துணை செயலராக உள்ளதால், நகர பொறுப்பாளர் செல்வத்திடம் இது பற்றி சொல்லியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இது பற்றி நகர பொறுப்பாளர் தி.மு.க. செல்வம் கூறியதாவது:- அப்பாவின் பி.எப். பணத்தில் மகனுக்கு உரிமை உள்ளதால் புவனேஸ்வரன் பணம் வாங்கியதாக கூறியுள்ளான். அவன் அண்ணன் தினேஸ்குமாரும் பணம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். தினேஸ்குமார் ஒன்றாவது வார்டு தி.மு.க. உறுப்பினராக உள்ளார். இந்த புகார் குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 11 April 2022 1:43 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  3. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  4. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  5. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  6. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  7. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்
  8. வீடியோ
    BaluMahendra-வை அப்பா போல் கவனித்த Garudan Director !#balumahendra...
  9. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...