சர்வதேச மகளிர் தினம்: ஆதரவற்றோர் மைய நிர்வாகிக்கு விருது

சர்வதேச மகளிர் தினம்: ஆதரவற்றோர் மைய நிர்வாகிக்கு விருது
X

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி திருச்செங்கோடு தனியார் கல்லூரி சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், குமாரபாளையம் அன்னை ஆதரவற்றோர் மையம் நடத்தி வரும் ஹேமாமாலினிக்கு சேவை விருதினை ஈரோடு டி.எஸ்.பி. பவித்ரா வழங்கினார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி குமாரபாளையம் ஆதரவற்றோர் மைய நிர்வாகிக்கு விருது வழங்கப்பட்டது

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி திருச்செங்கோடு தனியார் கல்லூரி சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், குமாரபாளையம் அன்னை ஆதரவற்றோர் மையம் நடத்தி வரும் ஹேமாமாலினிக்கு சேவை விருது வழங்கப்பட்டது. இதனை ஈரோடு டி.எஸ்.பி. பவித்ரா வழங்கினார்.

இது பற்றி நிறுவனர் ஹேமாமாலினி கூறியதாவது: நான் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவள். பெற்றோர் என் சிறு வயதில் இறந்ததால் நான் ஆதரவற்றோர் மையத்தில்தான் வளர்ந்தேன். மதுரையில் ஏ.என்.எம். டிப்ளமா நர்சிங் பயின்று வேலை செய்து வந்தேன். திருமணம் ஆகி சேலம் வந்தேன். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து குமாரபாளையத்திற்கு வந்தேன். 2019 முதல் அன்னை ஆதரவற்றோர் மையம் என்ற பெயரில் முதியோர் காப்பகம் அமைத்தேன்.

என் பெற்றோர் இல்லை என்றாலும் இங்குள்ள முதியோர்களை என் பெற்றோர்களாக எண்ணி வாழ்ந்து வருகிறேன். முதலில் ஒருவர், அடுத்து, 2,3,5,7,10 என்றாகி தற்போது 35 பேர் இல்லத்தில் தங்கி உள்ளனர். அனைவருக்கும் 3 வேளை உணவு, உடை, மருத்துவ உதவி என என்னால் முடிந்தவைகளை கொடுத்து வருகிறேன். பலர் பல சூழ்நிலைகளில் அவர்களது குடும்ப உறுப்பினர் களால் வெளியேற்றப்பட்டு, மனதிற்கு அவர்களின் செயல்பாடுகள் பிடிக்காமல் இங்கு வந்துள்ளனர். நான் அவர்களை கவனித்து கொள்கிறேன் என்பதை விட என்னை அவர்கள் மகள் போல் கவனித்து கொள்கிறார்கள்.

நல்ல மனம் படைத்த பலர் திருமண நாள், பிறந்த நாள், திருவிழா, வீட்டு திருமணம், உள்ளிட்ட பல விஷேச நிகழ்வுகளின் காரணமாக எங்கள் மையத்திற்கு உணவு வழங்கி வருகிறார்கள். அரசியல் கட்சியினர் மற்றும் சேவை சங்கத்தார் பல குழுவினர் சேவை மனப்பான்மையால் இங்குள்ளவர்களுக்கு உணவு கிடைத்து வருகிறது. கட்டில், தலையணை, பெட்சீட், பேன், உடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை தாராளமாக செய்து வருகிறார்கள். நல்லது செய்தால் ஆண்டவன் துணை நிற்பான் என்பது போல் ஆண்டவன் துணையால் இந்த மையம் இனிதே செயல்பட்டு வருகிறது. அரசு சார்பில் உதவிகள் கிடைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.


Tags

Next Story
ai in future agriculture