ஆசிய யோகாசன போட்டியில் குமாரபாளையம் மாணவ,மாணவியர் சாம்பியன்ஷிப்..!

ஆசிய யோகாசன போட்டியில் குமாரபாளையம் மாணவ,மாணவியர் சாம்பியன்ஷிப்..!
X

ஆசிய யோகாசன போட்டியில் சாம்பியன்ஷிப்பட்டம் வென்ற குமாரபாளையம் மாணவ,மாணவியரை நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

ஆசிய யோகாசன போட்டியில் குமாரபாளையம் மாணவ,மாணவியர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.

ஆசிய யோகாசன போட்டியில் குமாரபாளையம் மாணவ,மாணவியர் சாம்பியன்ஷிப் பெற்றிருப்பது நாமக்கல் மாவட்டத்துக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.

ஆசிய யோகாசன போட்டியில் குமாரபாளையம் மாணவ,மாணவியர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

ஆசிய அளவிலான யோகாசன போட்டிகள் தாய்லாந்து நாட்டில், பாங்காங் நகரில் நடந்தது. இதில் தமிழக அணி சார்பில் இந்திய அணிக்காக குமாரபாளையம் அரவிந்த் யோகா பயிற்சி நிலைய மாணவ, மாணவியர் உள்ளிட்ட 50 பேர் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற 25 மாணவ, மாணவியர்களும் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக ஆசிய அளவிலான யோகாசன போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.

இவர்களை தமிழ்நாடு யோகா பெடரேசன் பொது செயலர், இந்தியா யோகா அணியின் தேர்வாளர் அரவிந்த் தலைமையில் அழைத்து சென்றார். சாதனை படைத்த மாணவ, மாணவியரை நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பலரும் பாராட்டினர்.

Tags

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!