குமாரபாளையத்தில் 7 சாயப்பட்டறைகளை அகற்றி மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிரடி

குமாரபாளையத்தில்  7 சாயப்பட்டறைகளை அகற்றி மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிரடி
X

குமாரபாளையம் பகுதியில் அத்துமீறி செயல்பட்ட சாயப்பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஆட்களை வைத்து சுத்தியலால் உடைத்தனர்.

குமாரபாளையத்தில் 7 சாயப்பட்டறைகள் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டன

குமாரபாளையத்தில் 7 சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டன.

குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 200க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன. இவைகளில் விசைத்தறி மற்றும் கைத்தறி ரகங்களுக்கு தேவையான நூல்களுக்கு சாயம் போடப்படுகிறது. இவைகளில் அனுமதி பெற்ற சாயப்பட்டறைகள், அனுமதி பெறாத சாயப்பட்டறைகள் உள்ளன. அனுமதி பெற்ற சாயப்பட்டறைகள் உள்ளிட்ட அனைத்தும் சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்துதான் வெளியேற்ற வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வலியுறித்தி வருகின்றனர்.

இருப்பினும் சில நபர்கள் சுத்திகரிப்பு செய்யாமல் சாயக்கழிவு நீரை அப்படியே காவிரி ஆற்றில் கலக்க விடுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து, பொக்லின் உதவியுடன் இடித்து வருகின்றனர். மேலும் மின் இணைப்பும் துண்டித்து வருகின்றனர். இந்நிலையில் நாராயண நகர், அம்மன் நகர், சுந்தரம் நகர், கம்பன் நகர் உள்ளிட்ட பல இடங்களில் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் மணிவண்ணன் தலைமையில் 7 சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டன. பொக்லின் போக முடியாத இடங்களில் ஆட்களை வைத்து சுத்தியல் கொண்டு உடைத்தனர்.

இது குறித்து சிறு சாயப்பட்டறைகள் சங்க தலைவர் பிரபாகரன் கூறியதாவது: சாயப்பட்டறை பிரச்னை தீர்வு காண, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருவது மகிழ்ச்சி. இருப்பினும் அதற்குள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து கை சலவை செய்யும் சிறு சாயப்பட்டறைகளை குறி வைத்து இடித்து வருவது வருத்தத்திற்குரியது.

இது போன்ற சிறு சாயப்பட்டறைகளை இடித்தால், நகரில் விசைத்தறி பட்டறைகளுக்கு தேவையான நூல்கள் சாயமிட முடியாத நிலைமை ஏற்படும். ஜவுளி உற்பத்தி பாதிக்கும். ஆகவே சிறு சாயப்பட்டறைகளை குறி வைக்காமல், கழிவு நீர் சுத்திகரிப்பு செய்வதாக மெசின்கள் வைத்துக்கொண்டு, சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றும் ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இதில் உதவி பொறியாளர் உதயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.




Tags

Next Story
ai in future agriculture