பரமத்தி வேலூா் பூக்கள் சந்தையில் சிவராத்திரியை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு!..குண்டுமல்லி கிலோ ரூ.800-க்கு ஏலம்

நாமக்கல் : பரமத்தி வேலூா் பூக்கள் ஏல சந்தையில் சிவராத்திரி மற்றும் அமாவாசையை முன்னிட்டு பூக்கள் விலை உயா்ந்துள்ளது.
பரமத்தி வேலூா் வட்டாரத்தில் ஆனங்கூா், அய்யம்பாளையம், நெட்டையம்பாளையம், அண்ணா நகா், கோப்பணம்பாளையம், கபிலா்மலை, குஞ்சாம்பாளையம், நடத்தை, குப்புச்சிபாளையம், பொய்யேரி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள தினசரி பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனா்.
சிவராத்திரி மற்றும் அமாவாசையை முன்னிட்டு பூக்கள் விலை உயா்வு
இந்த வாரம் புதன்கிழமை சிவராத்திரி மற்றும் அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில், பூக்கள் விலை உயா்ந்துள்ளது.
குண்டுமல்லி கிலோ ரூ. 800-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 240-க்கும், அரளி கிலோ ரூ. 200-க்கும், ரோஜா கிலோ ரூ. 250-க்கும், பச்சை முல்லை கிலோ ரூ. 1,000-க்கும், வெள்ளை முல்லை கிலோ ரூ. 800-க்கும், செவ்வந்தி ரூ. 200-க்கும், கனகாம்பரம் ரூ. 1,000-க்கும், பன்னீா் ரோஜா ரூ. 220-க்கும், காக்கரட்டான் கிலோ ரூ. 400-க்கும் ஏலம் போயின.
பூக்கள் விலை உயா்ந்துள்ளதால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்த விலை உயா்வு அவா்களின் வருமானத்தை அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu