பள்ளிபாளையம் அக்னி மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா

பள்ளிப்பாளையத்தில் அக்னி மாரியம்மன் கோவில் திருவிழாவில் அலகு குத்தி ஊர்வலமாக வந்த பக்தர்கள் - பக்தி பரவசத்துடன் நிறைவேறிய பண்டிகை
பள்ளிப்பாளையம் அடுத்துள்ள ஆவாரங்காடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அக்னி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பூச்சாட்டுதல் நிகழ்வுடன் கோலாகலமாக தொடங்கியது. அதிலிருந்து நாள்தோறும் அபிஷேகம், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜைகள் என தொடர்ச்சியாக பல்வேறு சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. குறிப்பாக நேற்று காலை கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஏராளமான பக்தர்கள் அக்ரஹாரம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் இருந்து அலகு குத்தி, காவடி எடுத்து, மஞ்சள் நீராடி, பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். உடல் முழுவதும் மஞ்சள் பூசி, கறுப்பு வேட்டி உடுத்தி, வாய், கன்னம், நாக்கு, நெற்றி, தோள்பட்டை போன்ற உடலின் பல்வேறு பகுதிகளில் அலகு குத்தி, கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்திய பக்தர்களின் பக்தி உணர்வு அனைவரையும் நெகிழ வைத்தது. திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu