பள்ளிப்பாளையம் நகராட்சி பள்ளியில் ஆண்டு விழா

பள்ளிப்பாளையம் நகராட்சி பள்ளியில் ஆண்டு விழா
X
அரசுப்பள்ளி ஆண்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகள்

அரசுப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட நாட்டாகவுண்டன்புதூர் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் நேற்று ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் நகராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் துணைத்தலைவர் பாலமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். இந்த விழாவில் நகராட்சி ஆணையர் தயாளன், பொறியாளர் ரேணுகா, பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story