சித்த மருத்துவரை கத்தியுடன் மிரட்டி பணம் பறித்த 7 பேர் கைது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சூரியம்பாளையத்தைச் சேர்ந்த 31 வயதான சித்த மருத்துவர் ரத்தினத்தை தாக்கி மொபைல் போன், ஒரு லட்சம் ரூபாய் மற்றும் 2.5 பவுன் தங்க காப்பை பறித்த ஏழு பேரை நாமக்கல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர், கடந்த 26ம் தேதி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ரத்தினம் மோகனூர் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை முன் பஸ்ஸுக்காக காத்திருந்தபோது, அவரை டூவீலரில் வந்த ஒரு வாலிபர் 'லிப்ட்' கொடுப்பதாகக் கூறி கொங்குநகர் அருகே ரயில்வே பாதைக்கு அழைத்துச் சென்றார், அங்கு முன்னதாகவே காத்திருந்த கும்பல் மருத்துவரை கத்தியால் மிரட்டி அவரிடமிருந்த பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டு தப்பியது, புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட நாமக்கல் காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை வகுரம்பட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக டூவீலரில் வந்த இருவர் நிறுத்தாமல் வேகமாகச் சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்று ரயில்வே மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த இருவரையும் கைது செய்தனர், விசாரணையில் கைதானவர்கள் பட்டறைமேடு கார்த்திகேயன் (22), தில்லைபுரம் காமராஜர் நகரைச் சேர்ந்த புருஷோத்தமன் (24) என தெரியவந்தது, மேலும் சித்த மருத்துவரை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் கொசவம்பட்டி அருண் (22), சிவநாயக்கன்பட்டி எஸ்.சஞ்சய் (21), மதுரை கீழையூர் கார்த்திகேயன் (21), திருமலைப்பட்டி சஞ்சய் (19), கொசவம்பட்டி அருண்குமார் (24) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவர்களையும் கைது செய்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க காப்பை மீட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu