/* */

ஆக்சிஜன் சிலிண்டர் உடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை

வேளாங்கண்ணியில் ஆக்சிஜன் சிலிண்டர் உடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை பேராலய பங்குத்தந்தை தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

ஆக்சிஜன் சிலிண்டர் உடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை
X

கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி உதவிக் கரங்கள் அமைப்பு சார்பில் ஆக்சிஜன் பொருத்தப்பட்ட 24 மணி நேரம் இயங்கும் ஆம்புலன்ஸ் சேவை இன்று தொடங்கப்பட்டது.

உதவிக்கரங்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தலைமையில் வேளாங்கண்ணி பேராலய முகப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து ஆம்புலன்ஸ்க்கான சாவியை பேராலய பங்குத்தந்தை உதவிக்கரங்கள் அமைப்பிடம் வழங்கினார்.

மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியில் வாங்கப்பட்ட இந்த ஆம்புலன்ஸ் சேவை வேளாங்கண்ணியில் 24 மணி நேரமும் ஆக்சிசன் சிலிண்டருடன் இலவசமாக செயல்படும் என உதவிக் கரங்கள் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பங்கேற்றனர்.

Updated On: 19 May 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்