Begin typing your search above and press return to search.
பொறையாரில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை பொறையாரில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பொறையார் அரசு மருத்துவமனையில் மக்களுக்கு வழங்கும் தடுப்பூசி போடும் பணியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஆண்கள்,பெண்கள்,இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்எம் சித்திக் நாகை வடக்கு மாவட்ட பொருளாளர் ஜி என் ரவி. செம்மை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.