/* */

மாற்றுத்திறனாளி பெண்ணை வன்கொடுமை செய்த நபரை கைது செய்ய கோரி சாலை மறியல்

மாற்றுத்திறனாளி பெண்ணை வன்கொடுமை செய்த நபரை கைது செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளி பெண்ணை வன்கொடுமை செய்த நபரை கைது செய்ய கோரி சாலை மறியல்
X

பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பாட்ஷா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம், கொடைவிளாகம் அடுத்துள்ள தெற்கிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சம்பந்தம் மகன் பாட்ஷா என்கிற ராஜேஷ் (27). இவர் 26 வயது மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை கடந்த ஒருவருடமாக மிரட்டி பாலியல் ரீதியில் தொல்லை அளித்து வந்துள்ளார். தற்போது அந்த பெண் 7 மாத கர்ப்பிணியாகியுள்ளதை அறிந்த பெண்ணின் பெற்றோர் இரண்டுமுறை புகார் அளித்தும், பெரம்பூர் காவல் ஆய்வாளர் சிவதாஸ் புகாரை விசாரிக்காமல் குற்றவாளிக்கு ஆதரவாகவே பேசியுள்ளார்.

இதையடுத்து பெற்றோர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசனிடம் தெரிவித்ததன்பேரில் அவர் காவல் நிலையம் சென்று கேட்டுள்ளார். அப்போதும் காவல் ஆய்வாளர் சரியான பதில் அளிக்காததால், அக்கட்சியினர் பெரம்பூர் கடைவீதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சில மணி நேரம் நீடித்த போராட்டத்திற்கு பிறகு வந்த காவல்ஆய்வாளர் சிவதாஸ் குற்றவாளியை கைது செய்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து, ராஜேஷை கைது செய்த பெரம்பூர் போலீசார் வழக்கை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றி குற்றவாளியை அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 11 April 2021 12:47 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!