/* */

மயிலாடுதுறையில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பைக்குகள் எரிந்து நாசம்

மயிலாடுதுறையில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளுக்கு மர்ம நபர் தீயிட்டு எரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பைக்குகள் எரிந்து நாசம்
X

எரிந்த நிலையில் உள்ள இரண்டு பைகள்.

மயிலாடுதுறை, தெற்கு குமர கட்டளை தெருவை சேர்ந்தவர் அருள்குமரன் (40). இவரது இரண்டு பைக்குகளை அவரது வீட்டின் வாசலில் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் இவர் நேற்று இரவு பைக்குகளை வாசலில் நிறுத்திவைதிருந்தார்.

நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் இரண்டு இருசக்கர வாகனங்களையும் தீயிட்டுக் கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். வீட்டின் வெளியே வந்து பார்த்த அருள் குமரன் தனது இருசக்கர வாகனம் பாதி எரிந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு இருசக்கர வாகனங்களை எரித்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 30 July 2021 1:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  5. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  6. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  8. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  10. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு