உசிலம்பட்டியில் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

உசிலம்பட்டியில் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
X

மதுரை அருகே உசிலம்பட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா போதை பொருள்

உசிலம்பட்டி அருகே வீட்டில பதுக்கி வைக்கப்பட்டிருநத 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலிசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, உசிலம்பட்டி நகர் காவல் நிலையப் போலீஸார் மாதரையில், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது 3 வீடுகளில், கஞ்சா விற்பனைக்காக வாங்கி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீஸார் மாதரையைச் சேர்ந்த பாண்டி மகன் சூர்ய பிரகாஷ்(27). ஜெயக்குமார் மனைவி ராஜேஸ்வரி(45). வாசுதேவன் மனைவி மதுரா(42). ஆகிய இரு பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யபபட்டனர். இவர்களிடமிருந்து, 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபபட்டது. இது குறித்து, உசிலம்பட்டி நகர் காவல் நிலையப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story