மதுரை நகரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்: மேயர் - ஆணையாளர் ஆய்வு

மதுரை மாநகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆய்வு செய்தார்
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் வளர்ச்சித் திட்ட பணிகளான சாலைகள்,மழைநீர் வடிகால்கள், தூார்வாருதல் அங்கன்வாடி மையம் கட்டுதல், பள்ளிகள் சீரமைப்பு, தெருவிளக்குகள் பராமரிப்பு,நலவாழ்வு மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.55 அண்ணாத்தோப்பு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் பணியினை, பார்வையிட்டு அம்மருத்துவமனையில் பிரசவித்த தாய்க்கு தமிழக அரசின் தாய்சேய் நலபெட்டகம் மற்றும் பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழை வழங்கினார்.
மண்டலம் 3 வார்டு எண்.57 ஆரப்பாளையம் தண்ணீர் தொட்டி அருகில் புதியதாக அமைக்கப்பட உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வரும் பணியினையும் ,வார்டு எண்.70 துரைச்சாமி நகர் பகுதியில் புதிய உபகழிவுநீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு வரும் பணியினையும்,நேரு நகர் பகுதியில் செல்லும் வாய்க்காலை தூர்வாருவது குறித்து, மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, மண்டலம் 2 வார்டு எண்.34 அண்ணாநகர் மெயின் ரோட்டில்நிதி கட்டம் 1 கீழ் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்க மேற்கொள் ளப்பட்டு வரும் பணியினையும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், நகரப்பொறியாளர் அரசு துணை ஆணையாளர் தயாநிதி, மண்டலத் தலைவர்கள் பாண்டிச்செல்வி, சரவணபுவனேஸ்வரி, நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், உதவி ஆணையாளர்கள் மனோகரன்,வரலெட்சுமி மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் மாமன்ற உறுப்பினர்கள் விஜயா, இந்திராகாந்தி,அமுதா, பாண்டீஸ்வரி, உதவி செயற்பொறியாளர் சேகர்,உதவி நகர்நல அலுவலர் மரு.ஸ்ரீகோதை, சுகாதார அலுவலர்கள் வீரன், சிவசுப்பிரமணியன், உதவிப் பொறியாளர்கள் காமராஜ் , கனி ,சுகாதார ஆய்வாளர்கள் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu