மதுரையில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற பயிற்சி

மதுரைக் கல்லூரியில் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேர்வில் எளிதாக வெற்றி பெற வேண்டிய வழிமுறைகளுக்கான நிகழ்ச்சி மதுரைக் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ,சிறப்பு விருந்தினராக மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் பொன்னி, மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. பாஸ்கரன், கலந்து கொண்டு, மாணவர்களுக்கு ,யு.பி.எஸ்.சி. தேர்வில் எப்படி வெல்லலாம் என்ற அறிவுரைகளை வழங்கினர்.மேலும், தேர்வாளர்கள், தேர்விற்கு எந்த வித்த்தில் தயாராவது குறித்தும், தேர்வு எழுதும் விதம் குறித்தும், தேர்வில் கலந்து கொண்டு குடிமைப் பணிகளை தேர்வு கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும்,குடிமைப் பணி தேர்வுகளில் தேர்வு பெற்று சமுதாயப்பணி ஆற்ற முன்வர வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu