/* */

திருமங்கலம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது

திருமங்கலம் பெரிய கடை வீதியில், ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

திருமங்கலம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது
X

கைப்பற்றப்பட்ட கடத்தல் அரிசி. 

மதுரை மாவட்டம் திருமங்கலம் பெரியகடை வீதி பகுதியில், விஸ்வநாதன்(47) என்பவர் ரேஷன் அரிசியை கடத்தப்படுவதாக மதுரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருமங்கலம் பெரியகடைவீதி பகுதியில், உணவு கடத்தல் தடுப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது. விசுவநாதன் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது அவரது வீட்டில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். 40 கிலோ எடையில் 118 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இது, கிட்டத்தட்ட 4 3/4 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி ஆகும்.

இதனை தொடர்ந்து போலீசார், ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து விஸ்வநாதன் மீது அத்தியாவசிய பொருட்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.

Updated On: 26 Feb 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது