கோயில் திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு பாராட்டு

கோயில் திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு பாராட்டு
X
விழாவிற்கு மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்

சித்திரை திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருந்தளித்து விருது வழங்கப்பட்டது

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா 22 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. விழாவிற்கு மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்

பல லட்சம் பக்தர்கள் கூடிய இந்த திருவிழாவில் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள் முதல் கடை நிலை போலீசார் வரை அனைவரையும் பாராட்டும் விதமாக விருந்தும் விருதும் வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவிற்கு போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் தலைமை வகித்தார்.மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங்காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லதுரை, கள்ளழகர் கோவில் துணை கமிஷனர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய துணை கமிஷனர்கள் கூடுதல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் போலீஸ் கமிஷனர் விருது வழங்கி பாராட்டினார் தொடர்ந்து போலீசார் அனைவருக்கும் அசைவ சைவ விருந்து வழங்கப்பட்டது.


Tags

Next Story
ai in future agriculture