மதுரையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்: நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

மதுரையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்:  நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர்
X

மதுரை மாலட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடந்த் மக்கள் குறைதீர் முகாம் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிய ஆட்சியர் அனீஸ் சேகர்.

குடிசை மாற்றுவாரிய வீடுகள்,பசுமை வீடுகள் தொடர்பான 145 மனுக்கள் இதர மனுக்கள் 57 உள்பட மொத்தம் 555 மனுக்கள் பெறப்பட்டன

மதுரை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (27.02.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

பொது மக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாகப் பெற்று உடனடி தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர். பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து தகுதியான மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் அறிவுறுத்தினார்.

திங்கள்கிழமை நடைபெற்ற கூ ட்டத்தில் பொது மக்களிடமிருந்து இலவச வீட்டு மனைப்பட்டா வேண்டி 73 மனுக்கள், ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றகோரி 54 மனுக்கள், சாதிச்சான்றுகள் வேண்டி 3 மனுக்கள், மற்றும் இதர சான்றுகள் நிலம் தொடர்பான 67 மனுக்கள், குடும்ப அட்டை தொடர்பான 10 மனுக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை விபத்து, நிவாரணத்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட்ட உதவித்தொகை தொடர்பான 49 மனுக்கள், வேலைவாய்ப்பு கோரியது தொடர்பான 41 மனுக்கள், அடிப்படை வசதிகள் கோரியது (சாலை தெருவிளக்கு, தண்ணீர் குழாய், பேருந்து வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள்) தொடர்பான 10 மனுக்கள்.

புகார் தொடர்பான 33 மனுக்கள்,கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரியதுதொடர்பான 1 மனு, திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம் இரண்டு, பெண்குழந்தைகள் திட்டம் மற்றும் சலவைப்பெட்டி தொடர்பான 10 மனுக்கள், பென்சன் நிலுவைத்தொகை, ஓய்வூதிய பயன்கள் மற்றும் தொழிலாளர் நலவாரியம் தொடர்பான 2 மனுக்கள், இராஜாக்கூரில் கட்டப்பட்டுள்ல தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வீடுகள் மற்றும் பசுமை வீடுகள் தொடர்பான 145 மனுக்கள், மற்றும் இதர மனுக்கள் 57 என, மொத்தம் 555 மனுக்கள் பெறப்பட்டன.

இக்கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக 2 பயனாளிகளுக்கு ரூ.1.98 இலட்சம் மதிப்பீட்டில் செயற்கை அவையங்கள் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூபாய் 50 ஆயிரம் மதிப்பீட்டில் நாற்காலிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் வழங்கினார்.

இக்கூட்டத்தில்,மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் இரா.சௌந்தர்யா உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story