திருமங்கலம் அருகே சாலையை கடக்க முயன்றவர் பேருந்து மோதி உயிரிழப்பு

திருமங்கலம் அருகே சாலையை கடக்க முயன்றவர் பேருந்து மோதி உயிரிழப்பு

மதுரை மாவட்டம் ,திருமங்கலம் அருகே  சாலையோரம் கவிழ்ந்த அரசு விரைவுபேருந்து.

திருமங்கலம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் பேருந்துக்குள் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர்

மதுரை மாவட்டம், திருமங்கலம்- விருதுநகர் சாலையில் கன்னியாகுமரியில்- இருந்து வேலூருக்கு 18 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து, திருமங்கலம் ராயபாளையம் விலக்கில் வந்து கொண்டிருக்கும்போது, சாலையைக்கடக்க முயன்றாராம். அப்போது அவர் மீது மோதுய பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு, விரைந்து வந்த திருமங்கலம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கிய அவர்களை பத்திரமாக மீட்டனர். பேருந்து அடிபட்ட நபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பேருந்தில் பயணம் செய்த, 18 பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். சற்று நேரத்தி அனைவரைு, மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags

Next Story