திருமங்கலம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் பூக்குழி திருவிழா
திருமங்கலம் அருள்மிகு ஸ்ரீஎட்டு பட்டறை பத்ரகாளி முத்துமாரியம்மன் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு நடத்தினர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் கொல்லர் பட்டறை பகுதியில், பல ஆண்டுகள் பழமையான அருள்மிகு எட்டுபட்டறை பத்ரகாளி முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. புரட்டாசி மாத திருவிழா வருடந்தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றனர்.இந்த ஆண்டு 24 -ஆம் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு, அக்னிவிளக்கு வழிபாடு, மாவிளக்கு வழிபாடு, சுவாமி புறப்பாடு, பூச்சொரிதல், தீச்சட்டி எடுத்து முத்துமாரி அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு நேர்த்தி செலுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, அருள்மிகு ஸ்ரீபத்ரகாளி முத்துமாரியம்மனை தரிசித்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீரத நோய், வீடுகட்டுதல், திருமண தடை கர்மவினை நீங்க அம்மனை வேண்டி பக்தர்கள் காப்பு கட்டி, ஒரு மாத காலம் விரதம் இருந்து, பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். இக்கோவிலில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முத்துமாரி அம்மனை வணங்கி வழிபட்டு சென்றனர்.
இக்கோவில் திருவிழா நிகழ்வுகளை திருமங்கலம் விஜயன், அதிமுக முன்னாள் அமைச்சர் திருமங்கலம் சட்ட மன்ற உறுப்பினர் ஆர். பி. உதயகுமார் உள்ளிட்டோர் ஒருங்கிணைத் திருந்தனர். இதையொட்டி நடைபெற்ற அன்னதான நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu