/* */

ஐபிஎஸ் க்குத் தான் பாஜக வில் மவுசு: மாநில நிர்வாகி பேச்சு

பாஜகவில் ஐபிஎஸ்-சுக்குக்குதான் மவுசு என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் தெரிவித்தார்

HIGHLIGHTS

ஐபிஎஸ் க்குத்  தான்  பாஜக வில்  மவுசு: மாநில  நிர்வாகி பேச்சு
X

மதுரையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில கூட்டுறவு பிரிவு தலைவருமான மாணிக்கம் , பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன், பாஜக மாநகர் மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர்

பாஜகவில் ஐபிஎஸ்க்கு தான் முக்கியத்துவம், அதிமுகவில் யார் தலைவராக வர வேண்டும் என பாஜக முடிவு செய்யாது என பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில கூட்டுறவு பிரிவு சார்பில் 100வது ஆண்டு பன்னாட்டு கூட்டுறவு தின விழா, மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள செய்தியாளர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில கூட்டுறவு பிரிவு தலைவருமான மாணிக்கம் தலைமையில், பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன், பாஜக மாநகர் மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பன்னாட்டு கூட்டுறவு தின விழாவையொட்டி கேக் வெட்டி கொண்டாடினர்.தொடர்ந்து, மாநில கூட்டுறவு பிரிவு தலைவர் மாணிக்கம் பேசுகையில்:கூட்டுறவு திட்டங்களுக்கு நபார்டு வங்கி மூலம் மத்திய அரசு வழங்கும் நிதியை தமிழக அரசு சொந்த நிதியில் இருந்து வழங்குவதாக மாயை ஏற்படுத்தி தவறான செய்தியை சொல்லுகின்றனர். நியாயவிலைக் கடைகளால் மத்திய அரசு வழங்கும் 5 கிலோ அரிசியை தாங்கள் சொந்த நிதியை செலவழித்து வழங்குவது போல மாநில அரசு பொய் கூறுகின்றனர்.

விரைவில், அனைத்து கூட்டுறவு வங்கிகளும் மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் வரும். ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைந்து கொள்வாரா?பாஜக ஒரு ஜனநாயக கட்சி. யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பார்கள்.ஓபிஎஸ் தன்னை நம்பி வந்தவர்களுக்கு எதுவும் செய்ததில்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, எதிர்பார்ப்போடு இருந்தவர்கள் தான் ஏமாந்து இருப்பார்கள். நான் எந்த எதிர்ப்பார்ப்போடும் கட்சியில் இருக்கவில்லை.

ஒபிஎஸ் தனித்து விடப்பட்டு இருப்பது குறித்த கேள்விக்கு, அதிமுகவில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பேசினார். அதனைத்தொடர்ந்து, பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் பேசுகையில், சட்டமன்ற தீர்மானங்கள் குறித்து மாநில அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்டு அளித்த எந்த நோட்டீஸ்க்கும் மாநில அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை.

பாஜக, ஈபிஎஸ்க்கு தான் முக்கியத்துவம் தருகிறதா என்ற கேள்விக்கு, பாஜகவில் ஐபிஎஸ்க்கு தான் முக்கியத்துவம். பாஜகவை அண்ணாமலை திறம்பட வழிநடத்தி வருகிறார். அதிமுக எங்கள் கூட்டணி கட்சி. அதிமுகவில் யார் தலைவராக இருக்க வேண்டும் என்பதை பாஜக முடிவு செய்ய முடியாது. கூட்டுறவு துறையில் தவறுகள் நடந்தால் அதை பாஜக தட்டிக்கேட்கும். தமிழகத்தில் கூட்டுறவு இயக்கம் தோல்வியடைந்து விட்டது. தமிழகத்தில் நடைபெறும் எல்லா தவறுகளுக்கும் முன் ஒரு திமுககாரன் இருப்பான். கூட்டுறவில் சுண்டல், அரிசி, பருப்பு என்னனென்ன இருக்கோ எல்லாவற்றையும் திருடுகிறார்கள்.

மதுரை மாவட்டத்தில், கூட்டுறவு நிறுவனங்களை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளோம். திருடர்களை பிடிக்கவும், அரசுக்கு உதவவும் பாஜக இதனை செய்ய உள்ளோம். கூட்டுறவு துறைகள் தமிழகத்தில் நஷ்டத்தையும், தோல்வியையும் அடைந்துள்ளது என பேசினார்.

Updated On: 5 July 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்