மதுரையில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆயத்தக் கூட்டம்
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆயத்த கூட்டம் நடைபெற்றது:
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆயத்த கூட்டம் நடைபெற்றது:
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பத்திரிக்கையாளர் அரங்கத்தில் மண்டல அளவிலான ஆயத்த கூட்டத்தை நடத்தினர்.
குறிப்பாக, தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பணியாளர்களது கோரிக்கை, கடன் தள்ளுபடி சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் நடைமுறை சிரமங்கள் ஆகியவற்றை கலைந்திடும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வரும் ஏப்ரல் 3ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அனைத்து பணியாளர்களும் கலந்து கொள்ளும் வகையில் பேரணி நடத்துவது.
கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் ஏப்ரல் 24ஆம் தேதி அனைத்து பணியாளர்களும் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் சுமார் ஒரு லட்சம் பேர் கொண்ட மிகப் பெரிய பேரணியை சென்னையில் நடத்தி கூட்டுறவு துறை அமைச்சர் மூலம் முதலமைச்சருக்கு நேரில் கோரிக்கை மனு அளிப்பது குறித்துயில ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் குழு கடன் பயிர் கடன் நகை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு தற்போது வரை அந்த தொகை சங்கங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை.
எனவே, இந்த கடன் தொகைகளை வட்டியுடன் செலுத்த வேண்டும். செயலாளர்களுக்கான குறைகளை நீக்க வேண்டும் தணிக்கை துறையை பொறுத்தவரை கூட்டுறவு துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் அல்லது பட்டய தணிக்கைக்கு அனுமதிக்க வேண்டும். சங்கங்களுக்கு தேவையற்ற இயந்திரங்கள் உபகரணங்கள் வழங்குவதற்கு நிர்பந்திக்கப்படுவதைக் கைவிட வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு ஊதிய உயர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பேரணி மற்றும் மாபெரும் பேரணி நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu