மதுரை மாவட்ட கிரைம் செய்திகள்
பைல் படம்.
நீரேற்று நிலைய மோட்டார் அறையில் ஆபரேட்டர் உயிரிழப்பு:
ஆணையூர் மேல தெரு அய்யாவு மகன் பிடரண் 39. இவர் ஆனையூர் மெயின் ரோடு வாட்டர் டேங்க் நீரேற்றும் மோட்டார் ரூம் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவர் பணியில் இருந்த போது திடீரென்று மயங்கி விழுந்து பலியானார். இதுகுறித்து அவர் மனைவி முத்துப்பிள்ளை புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ மோதி விபத்து: ஒருவர் பலி
விளாச்சேரி ஜோசப் நகர் மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன் 52. இவர் ஆர்.வி.பட்டியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிய நடராஜனை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய உறவினர் கிருஷ்ணமூர்த்தி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்மோதி வாலிபர் பலி:
ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு காட்டூர் வாழான்தறவையை சேர்ந்தவர் சந்திரன் மகன் ஆசாத் கோஸ் 38. இவர் மேலூர் மெயின் ரோடு உத்தங்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கூடலூர் கவர்னர் தெருவை சேர்ந்த அபூபக்கர் சித்திக் 32 என்பவர் ஓட்டிச் சென்ற கார் மோதி விபத்தானது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். படுகாயமடைத்த ஆசாத்கோஷை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். ஆசாத்கோஷின் தாய் முனியம்மாள் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu