/* */

மதுரையில் வீடுகளில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜை

தமிழக அரசின் வழிகாட்டல் நெறிமுறை படி இந்த ஆண்டு எந்த பொது இடத்திலும் விநாயகர் சிலை வைக்கப்படவில்லை

HIGHLIGHTS

மதுரையில் வீடுகளில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜை
X

மதுரையில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி விநாயகர் சதுர்த்தி விழா வீடுகளிலேயே மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, தமிழக அரசு பொதுஇடங்களில், விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலம் செல்லவும் தடை விதித்தது. சமூக இடைவெளியைக்கடைப்பிடித்து வீட்டிலேயே மக்கள் கொண்டாட வேண்டும் என்ற தமிழக அரசு வேண்டுகோளும் வைத்திருந்தது. அதன் அடிப்படையில், மதுரை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அவரவர்கள் இல்லத்திலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை உற்சாகத்துடன் கொண்டாடினர். அதிகாலையில் எழுந்து விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை அவல் பொரி, வடை, அப்பம், இட்லி, முக்கனிகள், பால், பருப்பு பாயசம் உள்ளிட்ட பொருள்களுடன் படையல் வைத்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர் .

மேலும், பெரிய கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாத காரணத்தினால், கோவில் வாசலில் நின்றபடி சுவாமியை வழிபட்டு சென்றனர். சிறிய பிள்ளையார் கோயில்களில், சமூக இடைவெளியைப் பின்பற்றி வழிபட்டனர். தமிழக அரசின் வழிகாட்டல் நெறிமுறை படி இந்த ஆண்டு எந்த பொது இடத்திலும் விநாயகர் சிலை வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 10 Sep 2021 9:04 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  7. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  8. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்