மதுரையில் வீடு புகுந்து நகை திருடிய சம்பவம் : ஒரு நபர் கைது
வீடு புகுந்து நகை திருடிய பொன்னகரம் புட்டுத்தோப்பு மெயின் ரோடுவை சேர்ந்த வீரமணகண்ட பிரகாஷ்( 41 )என்பவரை கைது செய்தனர்
HIGHLIGHTS
மதுரை ஜெய்ஹிந்திபுரத்தில் வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்ட நபர் கைது
ஜெய்ஹிந்த்பபுரத்தில் வீடு புகுந்து நகை திருடிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஜெய்ஹிந்திபுரம் காலாங்கரை மீனாம்பிகை நகர் எட்டடாவது தெரு வைச் சேர்ந்தவர் செந்தில்முருகன் மனைவி ஜெயந்தி( 39 ).இவரது, வீடு புகுந்த மர்ம நபர் வீட்டில் வைத்திருந்த மூன்றரை பவுன் தங்க நகையை திருடிச் சென்று விட்டார் .இந்த சம்பவம் குறித்து, ஜெயந்தி ஜெய்ஹிந்திபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின், வீடு புகுந்து நகை திருடிய பொன்னகரம் புட்டுத்தோப்பு மெயின் ரோடுவை சேர்ந்த வீரமணகண்ட பிரகாஷ்( 41 )என்பவரை கைது செய்தனர்.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஜாமீன் கைதிகள் தலைமறைவு
போக்சோ நீதிமன்றத்தில் ஆஜராகாமல், தலைமறைவான மூன்று ஜாமீன் கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற கைதிகள் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து, தலைமை எழுத்தர் வீரலெட்சுமி கொடுத்த புகாரில், அணணாநகர் போலலீசார் வழக்கு பதிவு செய்து, மேலூர் பட்டணத்தை சேர்ந்த நந்தகுமார் மகன் வினோத், மேலூர் வாஞ்சி நகரம் அம்பலகாரன் பட்டியை சேர்ந்த கருப்பன் மகன் வெள்ளத்துரை, மீனாட்சி தியேட்டர் அருகே சக்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் லட்சுமணன் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர் .