/* */

ராணுவ வீரரை அழைத்து கௌரவப்படுத்திய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை

மதுரையில், கொரோனா விழிப்புணர்வு நடைபயண ராணுவ வீரரை அழைத்து வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை கௌரவப்படுத்தியது.

HIGHLIGHTS

ராணுவ வீரரை அழைத்து கௌரவப்படுத்திய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை
X

கொரோனா விழிப்புணர்வு நடைபயண ராணுவ வீரருக்கு மதுரையில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் இந்திய ராணுவ வீரர் பாலமுருகன். அசாம் ராணுவ பிரிவில் சேவையாற்றுகிறார்.இவர் தனி ஒருவராக ராமேஸ்வரம் பாம்பன் முதல் அயோத்தி வரை 197 நாடுகளின் தேசிய கொடியை தள்ளுவண்டி மூலம் 120கிலோ எடையுடன் 2800 கிலோமீட்டர் நடைபயணமாக செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் அதிகரித்த காலத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு உதவிய அனைத்துநாட்டு பிரதமர்கள்,மாநில முதலமைச்சர்கள், அரசு அதிகாரிகள்,மருத்துவர்கள், செவிலியர்கள், ராணுவத்தினர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள்,பத்திரிகையாளர்கள்,சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைத்து துறைகளை சார்ந்த ஊழியர்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக இந்த பயணத்தை அவர் மேற்கொண்டார்.

மேலும் பொதுமக்களை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு வழங்குகிறார்.இதன்படி மதுரை வந்த அவரை பாராட்டும் விதமாக வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மதுரை சிம்மக்கல் நகர்ப்புற வீடற்ற முதியோர் இல்லத்தில் இராணுவ வீரருக்கு சிறப்பானவரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும் அவரை பாராட்டும் விதமாக வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் ராணுவ வீரர் பாலமுருகனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார்.

அவர் பேசும்போது இந்திய ராணுவ வீரர்களின் தியாகங்கள் எல்லை பாதுகாப்பில் மட்டுமல்லாது. நாட்டு மக்களின் பல இக்கட்டான காலகட்டங்களில் அறியப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா பேரிடர் காலத்திலும் மிகப்பெரும் பங்களிப்பை வழங்கினர்.அதன் ஒருகட்டமாகவே ராணுவ வீரர் பாலமுருகன் சவாலான இந்த நன்றி தெரிவிக்கும் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொள்கிறார்.அவரது சாதனை பயணம் உரிய காலத்தில் இலக்கை அடைய வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்ங்குகிறோம் என்றார்.

தேசிய கீதம் பாடி நிகழ்ச்சி நிறைவு செய்து விழிப்புணர்வு வாகனத்துடன் சிம்மக்கல் சாலையில் ஊர்வலமாக சென்று வழியனுப்பினர்.இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் இல.அமுதன்,சுவாமிநாதன், மாயகிருஷ்ணன், மஸ்தான், நஜூமுதீன், துரைவிஜய பாண்டியன், செந்தில்குமார், பாலமுருகன்,கிரி,சுபாஷ், இளவரசன்,கார்த்திக், பெரியதுரை இல்லத்தின் மேலாளர் கிரேசியஸ்,முதியோர்கள், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Oct 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?