Begin typing your search above and press return to search.
செக்கானூரணி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது
செக்கானூரணி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சேகர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே செக்கானூரணி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, மதுரை சரக டிஐஜி-யின் தனிப்படை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தியபோது, தேங்கில் பட்டியை சேர்ந்த சேகர் வயது (47) என்பவர், கஞ்சா பதுக்கி வைத்து அப்பகுதியில் விற்பனை செய்தது தெரிய வந்தது.
அதன் அடிப்படையில், தனிப்படை போலீசார் சேகரிடம் இருந்த, ஆறு கிலோ கஞ்சா மற்றும் விற்பனை செய்த பணம் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு, பின்பு செக்கானூரணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.