/* */

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

மாணவர்களிடையே போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை பற்றி பேசினார்.

HIGHLIGHTS

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
X

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் பேசுகிறார், காவல் ஆய்வாளர் பால்ராஜ்.

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் போதை இல்லா சமுதாயம் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது:

மதுரை மாவட்டம்,திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், அகத்திர உறுதி மையமும் போதை ஒழிப்பு கமிட்டியும் இணைந்து நடத்திய போதை இல்லா சமுதாயம் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். கருத்தரங்கில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் ஜி. பால்ராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களிடையே போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை பற்றி பேசினார்.

கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த, கல்லூரியின் முதுநிலை மாணவர் ஒருங்கிணைப்பாளர் முனைவர் எல்லைராஜா, மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருங்கிணைப்பாளர் ரகு, தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், கணிதத் துறை பேராசிரியர் முனைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகத்திர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு வரவேற்புரை ஆற்றினார்.

முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் தர்மானந்தம் நன்றி உரையாற்றினார். நிகழ்வை, போதை பொருள் ஒழிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்லப்பாண்டியன் தொகுத்து வழங்கினார். அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கு பெற்றனர்

Updated On: 30 Aug 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு