/* */

பெட்ரோல் குண்டு வீசியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்

சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறதோ அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்

HIGHLIGHTS

பெட்ரோல் குண்டு வீசியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்
X

மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த பிரேமலதாவிஜயகாந்த்

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறதோ அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றார் தேமுதிக நிர்வாகி பிரேமலதா விஜயகாந்த்.


சென்னையிருந்து விமானம் மூலம் மதுரை வந்த பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளகளுக்கு அளித்த பேட்டியில் மேலும் அவர் கூறியதாவது:

ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு பிஸினஸ்தான் ஆம்னி பஸ் முதலாளிகளுக்குத்தான் லாபம் கிடைக்க அரசு உதவி செய்கிறது.ஆம்னி பஸ்களுக்கு பெஸ்டிவல் டைம்லா நல்ல வருமானம்.4 ஆயிரம் டிக்கட் கொடுத்து ஊருக்குபோய்டுவந்தா ஊர்ல போய் பெஸ்டிவல் கொண்டாட என்னா இருக்கு.மற்ற நேரங்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் குறைவாக இருக்கும் போது, பெஸ்டிவல் அதிக கட்டணம் வசூலிப்பது ஏன். எல்லாமே ஒரு வியாபாரமாக தான் நடைபெறுகிறது.

அரசும் வியாபார ரீதியாக செயல்படுகிறது.மக்களுக்கான அரசாக இல்லை.இது கண்டனத்திற்குரிய விஷயம்.ஆம்னி பஸ்களில் ஏன் தரம் உயர்த்துகிறீர்கள், அரசு பஸ்களை தரம் உயர்த்தினால் அனைவரும் அரசு பேருந்துகளிலே செல்வார்களே அதை ஏன் செய்யவில்லை.

அரசு பேருந்து , அரசு மருத்துவமனைக்கு மக்கள் செல்லாததற்கு காரணம் அவை தரம் இல்லாமல் போனது தான்தொடந்து, தமிழகம் முழுவதும் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல்.பெட்ரோல் குண்டு வீச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையை முதல்வர் கையில் வைத்துள்ளார். குண்டு வீச்சு யாரு செய்திருந்தாலும் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முழுவதும் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்று இருக்கு மக்கள் சார்பாக ஒரு வருத்தமான விஷயம் தமிழகத்தில் தான் இருக்கிறோம் என்ற சூழ்நிலை உள்ளது.ஆர் எஸ் எஸ், விசிக பேரணி இருவருமே இருவருமே சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.சட்டத்திற்கு முன் அனைவரும் தலை வணங்க வேண்டும் கவர்மெண்ட்,சட்டம் ஒழுங்கைபாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கிறதோ அதை நாம் வரவேற்க வேண்டும். ஓசி பேருந்து பயணம் குறித்த கேள்விக்கு:

ஒரு பெண்ணை அதிமுகவினர் வைத்து இது குறித்து விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது. மக்கள் இதை உணர வேண்டும். ஓசியில் போகிறார்கள் என கூறுகிறார்கள்.ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்க சில்லறை மாற்றுவதாக கூறுகிறார்கள். வெற்றி பெறுவதற்கு முன் ஒரு நிலைப்பாடு, வெற்றி பெற்ற பின் ஒரு நிலைப்பாடு என்ற நிலையில் உள்ளனர்.

இது அதிமுக பேசி ஏற்பாடு செய்ததாக கூறுகின்றனர்.ஓசியில் பயணம் வேண்டாம் என அந்த பெண்மணி கூறியது போல் ஒட்டுமொத்த பெண்களும் கூற வேண்டும்.ஓசி பேருந்து பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை.மக்கள் வரிப்பணத்தில் தான் அரசு பேருந்து ஓடுகிறது அமைச்சர் சொந்த பணத்திலா ஓடுகிறது.தமிழக மக்கள் அரசு பேருந்து பயணத்தை நிராகரித்து அரசுக்கு எச்சரிக்கை விட வேண்டும்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என செங்கலை வைத்து உதயநிதி அரசியல் செய்தார். பாஜக தலைவர் ஜெ.பி..நட்டா,எய்ம்ஸ் குறித்து அறிவித்து அதையே செய்தார். வெறும் அறிவிப்பாகவே உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக தென்னகத்தில் பெரிய நகராக மதுரை உள்ளது. சொன்னதுபோல், விரைவாக கட்டி முடிக்க வேண்டும் என கேட்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Updated On: 2 Oct 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!