வரி செலுத்தாத தனியார் மருத்துவமனைக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்

மதுரையில் வரிசெலுத்தாத தனியார் மருத்துவமனையில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி அதிகாரிகல்
மதுரை மாநகராட்சிக்கு வரி செலுத்தாத தனியார் மருத்துவமனைக்கு ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான சொத்து வரி, பாதாள சாக்கடை வரி, மற்றும் கடை வாடகை வசூல் செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை வசூல் செய்வதற்காக குழு அமைக்கப்பட்டு வீடுகள், வணிக நிறுவனங்களிடம் வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், மதுரை மாநகராட்;சி மண்டலம் எண்.1 வார்டு எண்.17 எல்லீஸ் நகரில் பகுதியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் நீண்ட நாட்களாக மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் இருந்தது. இது குறித்து வருவாய் குழுவின் மூலம் ஏற்கெனவே, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ரூ.16 லட்சம் வரை வரிபாக்கி வைத்திருந்த காரணத்தால் தனியார் மருத்துவமனைக்கு நீதிமன்ற உத்தரவின்படி உதவி ஆணையாளர் த.ரமேஷ் , தலைமையில் வருவாய் பிரிவின் மூலம் வாரண்ட் ஜப்தி நோட்டீஸ் (23.03.2022) ஒட்டப்பட்டது.
இந்த ஆய்வின் போது, உதவி ஆணையாளர் ரமேஷ், நிர்வாக அலுவலர்ரெங்கராஜன், சிறப்பு வருவாய் ஆய்வாளர்ஜமாலுதீன், உதவி வருவாய் அலுவலர்சித்ரா, கண்காணிப்பாளர்செந்தில்குமரன் உட்பட வருவாய் உதவியாளர்கள் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu