மதுரையில் பார் ஊழியருக்கு கத்திக்குத்து: ஒருவர் கைது
பைல் படம்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர் எஸ் மங்கலத்தை சேர்ந்தவர் அன்பு மகன் விஷ்ணு 24. செல்லூர் வைகை வடகரை அம்மா பாலம் சந்திப்பருகே ஒரு வீட்டில் வசித்து வரும் இவர். பார் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
சக ஊழியர்களுடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார். வீட்டின் மேல் மாடியில் ராமர் மகன் வைரமுத்து தன் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், சம்பவத்தன்று வைரமுத்து, விஷ்ணுவுடன் தகராறு செய்து, அவரை கத்தியால் தாக்கி உள்ளார். இந்த சம்பவம் குறித்து, விஷ்ணு செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கத்தியால் தாக்கிய வைரமுத்து 42 ஐ கைது செய்தனர்.
மின் ஊழியரை தாக்கியவர் கைது
மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் இ.பி. மெயின் ரோட்டை சேர்ந்தவர் மலைச்சாமி மகன் சௌந்தரபாண்டி 38 . இவர், திருப்பரங்குன்றம் மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், தினமும் வேலைக்கு செல்லும்போது பைக்காரா கபாலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் நல்லதம்பி 38. என்பவர் அவரை தினமும் ஆபாசமாக பேசியும் திட்டியும் உள்ளார். சம்பவத்தன்றும் அது போல பேசி உள்ளார். இதை, சௌந்தரபாண்டி தட்டி கேட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த நல்ல தம்பி அங்கிருந்த மர நாற்காலியை எடுத்து அவரை தாக்கி ஆபாசமாக பேசி மிரட்டி உள்ளார் .இந்த தாக்குதல் குறித்து, சௌந்தரபாண்டி சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை தாக்கிய நல்ல தம்பியை கைது செய்தனர்.
பெண்ணை கேலி செய்தவர் கைது
மதுரை, சம்மட்டிபுரம் ராஜ் நகர், இரண்டாவது தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் 39. இவர், அந்த பகுதியில் தன் உடலை ஆபாசமாக காட்டி பெண்களை கேலி செய்து வந்தார்.சம்பவத்தன்றும் அதுபோல நடந்துள்ளார். அப்போது, அவரது செயலால் ஆத்திரமடைந்த பெண்ஒருவர் பாலமுருகனை தட்டிக்கேட்டார்.
இதனால், ஆத்திரமடைந்தவர் அந்த பெண்ணை ஆபாசமாக பேசி அவரை தாக்கி உள்ளார். இந்த சம்பவம் குறித்து தாக்குதலுக்குள்ளான பெண், எஸ். எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தாக்கிய வாலிபர் பாலமுருகனை கைது செய்தனர்.
மனைவி இறந்த சோகத்தில் கணவர் விஷம் குடித்து தற்கொலை
மதுரை , ஐராவதநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவைச்சேர்ந்தவர் கணேசன் மகன் நாகராஜ் 23. கடந்த மாதம் இவருடைய மனைவி இறந்து விட்டார். அன்று முதல் நாகராஜ் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து, அவருடைய அம்மா மீனா தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து நாகராஜனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலையில் தீப்பிடித்து இளம் பெண் உயிரிழப்பு
மதுரை, திருப்பரங்குன்றத்தில் சமையல் செய்தபோது சேலையில் தீ பிடித்து இளம்பெண் பலியானார்.
தென்பரங்குன்றம் காசி தோட்டம் கள்ளர் தெருவை சேர்ந்தவர் அசோக் குமார் மனைவி நந்தினி 30. இவர், சம்பவத்தன்று வீட்டில் சமையல் செய்வதற்கு அடுப்பை பற்றவைக்கும் முன்றார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பற்றியது. இதில் தீயில் கருகி நந்தினி உயிருக்கு போராடினார். அவரை சிகிச்சைக்காக திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து, திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நந்தினியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu